கொல்லம் - திருப்பதி இடையே புதிய ரயில் சேவை- கோவையில் நின்று செல்லும் என அறிவிப்பு

கொல்லத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் (எண்:17422), புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோவை சந்திப்புக்கு மாலை 6:32 மணிக்கு வந்து 6:35 மணிக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்லத்திலிருந்து திருப்பதி இடையே, வாரமிரு நாட்கள் புதிய ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், கோவையில் நின்று செல்லும் என்பதால், திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் ரயில் வசதி கிடைக்கவுள்ளது.

அதன்படி கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து, ஆந்திராவிலுள்ள திருப்பதிக்கு வாரமிரு முறை ரயிலை புதிதாக இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வரும் 15ம் தேதியிலிருந்து, திருப்பதியிலிருந்து இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில், திருப்பதியில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள், மதியம் 2:40 மணிக்குப் புறப்பட்டு, கொல்லத்துக்கு மறுநாள் காலை 6:20க்குச் சென்றடையும். கொல்லத்திலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில், காலை 10:45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 3:20 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.

சித்துார், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவள்ளா, செங்கனுார், மாவேலிக்கரா, காயாங்குளம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிற்கும்.

திருப்பதியிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் (எண்:17421), செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவை சந்திப்புக்கு இரவு 10:12 மணிக்கு வந்து, 10:15 மணிக்குப் புறப்படும். கொல்லத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் (எண்:17422), புதன் மற்றும் சனிக்கிழமைகளில், கோவை சந்திப்புக்கு மாலை 6:32 மணிக்கு வந்து 6:35 மணிக்குப் புறப்படும்.

கோவையிலிருந்து திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள், இங்கு புதன், சனிக்கிழமை மாலையில் ரயில் ஏறினால், மறுநாள் அதிகாலையில் திருப்பதிக்குச் செல்ல முடியும் என்பதால், இந்த ரயில் சேவை, திருப்பதி வெங்கடாசலபதி பக்தர்களுக்குக் கூடுதல் போக்குவரத்து வசதியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...