கொல்லம் - திருப்பதி இடையே புதிய ரயில் சேவை- கோவையில் நின்று செல்லும் என அறிவிப்பு

கொல்லத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் (எண்:17422), புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோவை சந்திப்புக்கு மாலை 6:32 மணிக்கு வந்து 6:35 மணிக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்லத்திலிருந்து திருப்பதி இடையே, வாரமிரு நாட்கள் புதிய ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், கோவையில் நின்று செல்லும் என்பதால், திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் ரயில் வசதி கிடைக்கவுள்ளது.

அதன்படி கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து, ஆந்திராவிலுள்ள திருப்பதிக்கு வாரமிரு முறை ரயிலை புதிதாக இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வரும் 15ம் தேதியிலிருந்து, திருப்பதியிலிருந்து இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில், திருப்பதியில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள், மதியம் 2:40 மணிக்குப் புறப்பட்டு, கொல்லத்துக்கு மறுநாள் காலை 6:20க்குச் சென்றடையும். கொல்லத்திலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில், காலை 10:45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 3:20 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.

சித்துார், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவள்ளா, செங்கனுார், மாவேலிக்கரா, காயாங்குளம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிற்கும்.

திருப்பதியிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் (எண்:17421), செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவை சந்திப்புக்கு இரவு 10:12 மணிக்கு வந்து, 10:15 மணிக்குப் புறப்படும். கொல்லத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் (எண்:17422), புதன் மற்றும் சனிக்கிழமைகளில், கோவை சந்திப்புக்கு மாலை 6:32 மணிக்கு வந்து 6:35 மணிக்குப் புறப்படும்.

கோவையிலிருந்து திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள், இங்கு புதன், சனிக்கிழமை மாலையில் ரயில் ஏறினால், மறுநாள் அதிகாலையில் திருப்பதிக்குச் செல்ல முடியும் என்பதால், இந்த ரயில் சேவை, திருப்பதி வெங்கடாசலபதி பக்தர்களுக்குக் கூடுதல் போக்குவரத்து வசதியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...