கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விக்கல் எடுத்து தவித்த மூதாட்டி – தண்ணீர் கொடுத்து உதவிய பெண் காவலர்

கணவர் இறந்துவிட்ட நிலையில் என்னை பார்த்துக் கொள்ளாமல் சொத்துக்களை மட்டும் எழுதி தருமாறு தனது மகன் கொடுமை செய்வதாக மூதாட்டி கருப்பாத்தாள் புகார் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவர்களது மனுக்களை அளிக்க வந்திருந்தனர். அதன் ஒருபகுதியாக சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் வசித்து வரும் 85 வயதான கருப்பாத்தாள் என்ற மூதாட்டி தனது மகன் தன்னை கவனித்துக் கொள்ளாமல் சொத்து மட்டும் எழுதித் தருமாறு கேட்டு தகராறு செய்வதாக கூறி இளைய மகள் ருக்மணியுடன் நான்கு சக்கர நாற்காலியில் மனு அளிக்க வந்திருந்தார்.



மனு அளித்து விட்டு வெளியில் வந்த நிலையில் ருக்மணி மூதாட்டியை ஆட்சியர் அலுவலகத்தில் ஓரமாக அமர வைத்துவிட்டு உண்பதற்கு சிற்றுண்டி வாங்கி கொடுத்துவிட்டு மனு சம்பந்தமாக அலுவலர்களை பார்க்க சென்றுள்ளார். மூதாட்டி சிற்றுண்டியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விக்கல் எடுத்துள்ளது.

அப்போது தண்ணீர் பாட்டிலை கூட எடுத்து தண்ணீரை குடிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த பவானி என்ற பெண் காவலர் ஓடிச்சென்று மூதாடிக்கு தண்ணீர் குடிக்க உதவியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த மூதாட்டி பெண் காவலர் தலையில் கை வைத்து நன்றாக இருக்க வேண்டும் என ஆசீர்வாதம் செய்தார். அதை பெண் காவலரும் பணிவாக ஏற்றுக்கொண்டார்.



இது குறித்து மூதாட்டி கருப்பாத்தாள் கூறுகையில், தனது கணவர் அரசு வேலை செய்து வந்ததாகவும் தனக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருப்பதாக கூறினார். கணவர் இறந்துவிட்ட நிலையில் தன்னுடைய இளைய மகள் ருக்மணி தான் தன்னை கவனித்துக் கொள்வதாகவும் ஆனால் என்னுடைய மகன் குணசேகரன் என்னை பார்த்துக் கொள்ளாமல் சொத்துக்களை மட்டும் எழுதித் தருமாறு கேட்டு துன்புறுத்தி வருவதாகவும் கொடுமை செய்வதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து ருக்மணி கூறுகையில் அம்மாவை பார்ப்பதற்கு கூட என்னுடைய அண்ணன் குணசேகரன் வருவதில்லை எனவும், மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்ளாமல் சொத்தை மட்டும் எழுதிக் கொடுக்க நிர்பந்திப்பதாக தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...