கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விக்கல் எடுத்து தவித்த மூதாட்டி – தண்ணீர் கொடுத்து உதவிய பெண் காவலர்

கணவர் இறந்துவிட்ட நிலையில் என்னை பார்த்துக் கொள்ளாமல் சொத்துக்களை மட்டும் எழுதி தருமாறு தனது மகன் கொடுமை செய்வதாக மூதாட்டி கருப்பாத்தாள் புகார் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவர்களது மனுக்களை அளிக்க வந்திருந்தனர். அதன் ஒருபகுதியாக சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் வசித்து வரும் 85 வயதான கருப்பாத்தாள் என்ற மூதாட்டி தனது மகன் தன்னை கவனித்துக் கொள்ளாமல் சொத்து மட்டும் எழுதித் தருமாறு கேட்டு தகராறு செய்வதாக கூறி இளைய மகள் ருக்மணியுடன் நான்கு சக்கர நாற்காலியில் மனு அளிக்க வந்திருந்தார்.



மனு அளித்து விட்டு வெளியில் வந்த நிலையில் ருக்மணி மூதாட்டியை ஆட்சியர் அலுவலகத்தில் ஓரமாக அமர வைத்துவிட்டு உண்பதற்கு சிற்றுண்டி வாங்கி கொடுத்துவிட்டு மனு சம்பந்தமாக அலுவலர்களை பார்க்க சென்றுள்ளார். மூதாட்டி சிற்றுண்டியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விக்கல் எடுத்துள்ளது.

அப்போது தண்ணீர் பாட்டிலை கூட எடுத்து தண்ணீரை குடிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த பவானி என்ற பெண் காவலர் ஓடிச்சென்று மூதாடிக்கு தண்ணீர் குடிக்க உதவியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த மூதாட்டி பெண் காவலர் தலையில் கை வைத்து நன்றாக இருக்க வேண்டும் என ஆசீர்வாதம் செய்தார். அதை பெண் காவலரும் பணிவாக ஏற்றுக்கொண்டார்.



இது குறித்து மூதாட்டி கருப்பாத்தாள் கூறுகையில், தனது கணவர் அரசு வேலை செய்து வந்ததாகவும் தனக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருப்பதாக கூறினார். கணவர் இறந்துவிட்ட நிலையில் தன்னுடைய இளைய மகள் ருக்மணி தான் தன்னை கவனித்துக் கொள்வதாகவும் ஆனால் என்னுடைய மகன் குணசேகரன் என்னை பார்த்துக் கொள்ளாமல் சொத்துக்களை மட்டும் எழுதித் தருமாறு கேட்டு துன்புறுத்தி வருவதாகவும் கொடுமை செய்வதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து ருக்மணி கூறுகையில் அம்மாவை பார்ப்பதற்கு கூட என்னுடைய அண்ணன் குணசேகரன் வருவதில்லை எனவும், மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்ளாமல் சொத்தை மட்டும் எழுதிக் கொடுக்க நிர்பந்திப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...