நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணிக்கு ஆதரவு – திருப்பூரில் பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேட்டி

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் பொறுப்பாளர் கதிரவன் தெரிவித்து இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் விளக்கமளித்துள்ளார்.


திருப்பூர்: அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் கர்ணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பெயரில் முன்னாள் பொறுப்பாளர் கதிரவன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் பொறுப்பாளர் கதிரவன் எடுத்த முடிவு தன்னிச்சையான முடிவு என்றும், ஆனால் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தமிழகத்தில் உள்ள நிர்வாகிகள் பெரும்பாலானோர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும், கதிரவனின் முடிவு என்பது தன்னிச்சையான முடிவு. அது ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் முடிவு அல்ல என்றும் தெரிவித்தார். மேலும் ஓரிரு நாட்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பார்வேர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு சீட்டு கேட்டு பெறப்போவதாகவும், கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அரசு 68 ஜாதினருக்கு எதிராக பத்து புள்ளி ஐந்து சதவீதம் கொண்டு வந்தது. அதனால் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக முதல்வரை சந்திக்கும் பொழுது டிஎன்பி என்ற ஒற்றைச் சான்று முறையை கொண்டுவர வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய செயலாளரும் மாநில பொருளாளருமான சுரேஷ் பேசுகையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முக்குலத்தோர் சமுதாயம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிகழ்வு என்பது முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே ஆறாத காயமாக உள்ளதாகவும் ஆகையால் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை அனைத்து மாவட்ட செயலாளர் அவர்கள் மாநில பொறுப்பாளர்கள் ஒற்றைக் கருத்துடன் ஆதரித்து உள்ளதாகவும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் மாநில பொருளாளருமான சுரேஷ் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...