நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், வாக்குப்பதிவு தொடர்பான நடைமுறை, வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள 288 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கோவை காந்திபுரம் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று (மார்ச்.9) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் இந்த வகுப்பு நடைபெற்றது.



இந்த பயிற்சி வகுப்பில் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், வாக்குப்பதிவு தொடர்பான நடைமுறை, முதன்மை வாக்குப் பதிவு (Presiding Officers) அலுவலர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



இப்பயிற்சி வகுப்பினை தனித் துணை ஆட்சியர்( சமூகப் பாதுகாப்பு திட்டம்) சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் அலுவலர்களுக்கு பயிற்சியினை வழங்கினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...