மீண்டும் பாஜக ஆட்சி அமைய பொதுமக்கள் விருப்பம் - திருப்பூரில் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல் பேட்டி

பல்லடத்திற்கு பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக மாவட்ட தலைவர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான செந்தில்வேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி சிறப்பான முறையில் இருந்ததாகவும், மீண்டும் அதே ஆட்சி அமைய வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாகவும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோரிக்கைகள் பாஜகவின் தேசிய தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு கட்சியின் மத்திய தலைமைக்கு அனுப்ப இருப்பதாகவும், மேலும் 10 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளையும் கிராமங்கள் தோறும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பின்பு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும், தினந்தோறும் கட்சியினர் இணைந்து வரக்கூடிய நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் விரைவில் மிகப்பெரிய இணைப்பு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...