மீண்டும் பாஜக ஆட்சி அமைய பொதுமக்கள் விருப்பம் - திருப்பூரில் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல் பேட்டி

பல்லடத்திற்கு பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக மாவட்ட தலைவர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான செந்தில்வேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி சிறப்பான முறையில் இருந்ததாகவும், மீண்டும் அதே ஆட்சி அமைய வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாகவும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோரிக்கைகள் பாஜகவின் தேசிய தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு கட்சியின் மத்திய தலைமைக்கு அனுப்ப இருப்பதாகவும், மேலும் 10 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளையும் கிராமங்கள் தோறும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பின்பு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும், தினந்தோறும் கட்சியினர் இணைந்து வரக்கூடிய நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் விரைவில் மிகப்பெரிய இணைப்பு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...