கோவை தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட டாக்டர் கோகுல் கிருபா சங்கர் விருப்பமனு சமர்ப்பிப்பு

கோவை தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை தி.மு.க கட்சியின் பிரமுக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்களின் ஆதரவுடன் சமர்ப்பித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் சார்பில் திமுகவின் உயர் நிலை நிர்வாகியும், மாநில மருத்துவ அணி இணை செயலாளருமான டாக்டர் கோகுல் கிருபா சங்கர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை சமர்ப்பித்துள்ளார். இந்த நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.ரவி தொண்டாமுத்தூர், பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை செந்தமிழ் செல்வன், மாநகர மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வடவள்ளி தங்கம், குப்புசாமி மற்றும்ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

டாக்டர் கோகுல் கிருபா சங்கர் தி.மு.கவின் மிக முக்கிய உறுப்பினராக தனது அரசியல் வாழ்வினை தொடங்கி, பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக பெருமழை, கொரோனா பாதிப்பு காலங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் உதவி பணிகளில் முன்னின்று பணியாற்றியுள்ளார். 2006 முதல் அனைத்து மாநில மற்றும் மத்திய தேர்தல்களிலும் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி, 2013ல் மாநில மருத்துவ அணி துணை செயலாளராகவும், 2023ல் இணை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். அவினாசி தொகுதியில் 2019 மற்றும் 2024 தேர்தல்களிலும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 2021லும் பொறுப்பு வகித்துள்ளார். தி.மு.க குடும்பத்தில் பிறந்து, கட்சியின் மூல மதிப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் டாக்டர் சங்கரின் அரசியல் பயணம் சமூகத்திற்கும், கட்சிக்கும் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...