கோவை தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட டாக்டர் கோகுல் கிருபா சங்கர் விருப்பமனு சமர்ப்பிப்பு

கோவை தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை தி.மு.க கட்சியின் பிரமுக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்களின் ஆதரவுடன் சமர்ப்பித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் சார்பில் திமுகவின் உயர் நிலை நிர்வாகியும், மாநில மருத்துவ அணி இணை செயலாளருமான டாக்டர் கோகுல் கிருபா சங்கர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை சமர்ப்பித்துள்ளார். இந்த நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.ரவி தொண்டாமுத்தூர், பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை செந்தமிழ் செல்வன், மாநகர மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வடவள்ளி தங்கம், குப்புசாமி மற்றும்ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

டாக்டர் கோகுல் கிருபா சங்கர் தி.மு.கவின் மிக முக்கிய உறுப்பினராக தனது அரசியல் வாழ்வினை தொடங்கி, பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக பெருமழை, கொரோனா பாதிப்பு காலங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் உதவி பணிகளில் முன்னின்று பணியாற்றியுள்ளார். 2006 முதல் அனைத்து மாநில மற்றும் மத்திய தேர்தல்களிலும் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி, 2013ல் மாநில மருத்துவ அணி துணை செயலாளராகவும், 2023ல் இணை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். அவினாசி தொகுதியில் 2019 மற்றும் 2024 தேர்தல்களிலும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 2021லும் பொறுப்பு வகித்துள்ளார். தி.மு.க குடும்பத்தில் பிறந்து, கட்சியின் மூல மதிப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் டாக்டர் சங்கரின் அரசியல் பயணம் சமூகத்திற்கும், கட்சிக்கும் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...