கோவை தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட டாக்டர் கோகுல் கிருபா சங்கர் விருப்பமனு சமர்ப்பிப்பு

கோவை தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை தி.மு.க கட்சியின் பிரமுக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்களின் ஆதரவுடன் சமர்ப்பித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் சார்பில் திமுகவின் உயர் நிலை நிர்வாகியும், மாநில மருத்துவ அணி இணை செயலாளருமான டாக்டர் கோகுல் கிருபா சங்கர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை சமர்ப்பித்துள்ளார். இந்த நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.ரவி தொண்டாமுத்தூர், பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை செந்தமிழ் செல்வன், மாநகர மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வடவள்ளி தங்கம், குப்புசாமி மற்றும்ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

டாக்டர் கோகுல் கிருபா சங்கர் தி.மு.கவின் மிக முக்கிய உறுப்பினராக தனது அரசியல் வாழ்வினை தொடங்கி, பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக பெருமழை, கொரோனா பாதிப்பு காலங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் உதவி பணிகளில் முன்னின்று பணியாற்றியுள்ளார். 2006 முதல் அனைத்து மாநில மற்றும் மத்திய தேர்தல்களிலும் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி, 2013ல் மாநில மருத்துவ அணி துணை செயலாளராகவும், 2023ல் இணை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். அவினாசி தொகுதியில் 2019 மற்றும் 2024 தேர்தல்களிலும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 2021லும் பொறுப்பு வகித்துள்ளார். தி.மு.க குடும்பத்தில் பிறந்து, கட்சியின் மூல மதிப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் டாக்டர் சங்கரின் அரசியல் பயணம் சமூகத்திற்கும், கட்சிக்கும் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...