சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் கடைகள் மின் இணைப்பில் விதிமுறை மீறல்: அபராதம் விதிப்பு

சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிறுவனம் புதிதாக கட்டியுள்ள கடைகளுக்கு அரசால் வழங்கப்படும் மின் இணைப்பில் விதிமுறைகளை மீறி பயன்படுத்தியதாக கண்டுபிடிப்பு; 23.2.2024 அன்று ரூ. 23,032 அபராதம் விதிக்கப்பட்டு நீடிக்கப்பட்ட மின் வயர்கள் அகற்றப்பட்டன.


Coimbatore: சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிறுவனத்தின் புதிய கடைகளுக்கு விதிமுறைகளை மீறி மின் இணைப்பு பெற்றுள்ள விவகாரம் கவனம் ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் ஜனநாயக முறையில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி 22.2.2024 மற்றும் 26.2.2024 அன்று அமலாக்கத் துறை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளிக்கப்பட்ட புகார்களின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்ததில், புதிதாக கட்டப்பட்ட வணிக கடைக ளுக்கு விதிமுறைகளை மீறி மின் இணைப்பு பெற்றுள்ளது உறுதியானது. இதன் அடிப்படையில், 23.2.2024 அன்று ரூ.23,032 அபராதம் விதிக்கப்பட்டு, அனுமதியின்றி நீடிக்கப்பட்ட மின் வயர்கள் அகற்றப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு பின்னர், கோவை மின் பகர் மான வட்டத்தின் மேல் நடவடிக்கை கோரிய புகாருக்கு பதிலளித்து, கோ. குப்புராணி பிஇ, தலைமை பொறியாளர், கோவை மண்டலம் எனக்கு பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை நான் முகநூலில் பதிவிட்டுள்ளேன் என்று லோட்டஸ் மணிகண்டன், ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு சட்டப்பூர்வமான மின் இணைப்புகளை பெறுவதற்கான அவசியத்தையும், விதிமுறைகளை மீறிய செயல்களுக்கு எதிரான அரசின் உறுதியான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...