திருப்பூர் மாநகராட்சியில் "எனது குப்பை எனது பொறுப்பு" விழிப்புணர்வு நிகழ்வு – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், மீதமான உணவுகள், அசைவகழிவுகள், காய்ந்த மலர்கள், தோட்டக்கழிவுகள், முட்டை ஓடுகள் என மக்கும் ஈரக்கழிவுகள் மற்றும் மக்காத உலர் கழிவுகளான பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட சேகாரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் "எனது குப்பை எனது பொறுப்பு" என்னும் தலைப்பில் திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி இன்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் முன்னிலையில் மண்டலம்-3, 49-வது வார்டு, கே.என்.பி. சுப்ரமணியன் நகர் பகுதியில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதில் காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், மீதமான உணவுகள், அசைவகழிவுகள், காய்ந்த மலர்கள், தோட்டக்கழிவுகள், முட்டை ஓடுகள் என மக்கும் ஈரக்கழிவுகள் மற்றும் மக்காத உலர் கழிவுகளான பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், உலோகப் பொருட்கள், ரப்பர் பொருட்கள், கிழிந்த துணிகள், காகிதம், அட்டைப் பெட்டிகள், அபாயகரமான குப்பைகளான வயர்கள், கூர்மையான ஆயுதங்கள், பேட்டரிகள் மற்றும் பல்புகள், வர்ணம் மற்றும் பெயிண்ட் டப்பாக்கள், மருத்துவ கழிவுகளான சானிடரி பேட், டயப்பர், மருந்து மாத்திரை மற்றும் ஊசிகள், உள்ளிட்ட சேகாரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க கேட்டுக்கொண்டனர்.



முன்னதாக துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி குப்பைகளை எவ்வாறு கையாள்வது தரம் பிரிக்கும் போது ஏற்படும் நன்மை தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கையுறை, தொப்பி, முக கவசம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு.கௌரி சரவணன், மண்டலம் 3&4 உதவி ஆணையாளர் வினோத், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...