திருப்பூர் மாநகராட்சியில் "எனது குப்பை எனது பொறுப்பு" விழிப்புணர்வு நிகழ்வு – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், மீதமான உணவுகள், அசைவகழிவுகள், காய்ந்த மலர்கள், தோட்டக்கழிவுகள், முட்டை ஓடுகள் என மக்கும் ஈரக்கழிவுகள் மற்றும் மக்காத உலர் கழிவுகளான பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட சேகாரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் "எனது குப்பை எனது பொறுப்பு" என்னும் தலைப்பில் திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி இன்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் முன்னிலையில் மண்டலம்-3, 49-வது வார்டு, கே.என்.பி. சுப்ரமணியன் நகர் பகுதியில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதில் காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், மீதமான உணவுகள், அசைவகழிவுகள், காய்ந்த மலர்கள், தோட்டக்கழிவுகள், முட்டை ஓடுகள் என மக்கும் ஈரக்கழிவுகள் மற்றும் மக்காத உலர் கழிவுகளான பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், உலோகப் பொருட்கள், ரப்பர் பொருட்கள், கிழிந்த துணிகள், காகிதம், அட்டைப் பெட்டிகள், அபாயகரமான குப்பைகளான வயர்கள், கூர்மையான ஆயுதங்கள், பேட்டரிகள் மற்றும் பல்புகள், வர்ணம் மற்றும் பெயிண்ட் டப்பாக்கள், மருத்துவ கழிவுகளான சானிடரி பேட், டயப்பர், மருந்து மாத்திரை மற்றும் ஊசிகள், உள்ளிட்ட சேகாரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க கேட்டுக்கொண்டனர்.



முன்னதாக துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி குப்பைகளை எவ்வாறு கையாள்வது தரம் பிரிக்கும் போது ஏற்படும் நன்மை தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கையுறை, தொப்பி, முக கவசம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு.கௌரி சரவணன், மண்டலம் 3&4 உதவி ஆணையாளர் வினோத், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...