உடுமலையில் பட்டா மாறுதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம்-துண்டு விரித்து வட்டாச்சியர் அலுவலகம் முன்பு விவசாயி பிச்சை எடுக்கும் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும் 20-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் வேலைக்கு வரவில்லை. இதனால் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஊராட்சி இந்திராநகர் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்ற விவசாயி பட்டா மாறுதல் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் விண்ணப்பம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தினமும் அதிகாரிகள் தட்சிணாமூர்த்தியை அலைக்கழித்தாக கூறப்படும் நிலையில் இன்று வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கேட்டபோது அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நபர் ஒருவர் விண்ணப்பத்தை தூக்கி எறிந்தாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தட்சிணாமூர்த்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு துண்டு விரித்து பட்டா மாறுதல் செய்ய வருவாய்த் துறையினருக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வருவாய்த் துறையினர் விரைவில் பட்டா மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் கூறியதால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

வருவாய்த்துறையினர் கூறும் பொழுது. தற்சமயம் தமிழக முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும் 20-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் வேலைக்கு வரவில்லை. இதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பணியில் உள்ள அதிகாரிகளை வைத்து கள ஆய்வு மேற்கொண்டு பட்டா மாறுதல் செய்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பட்ட் மாறுதல் வழங்க அதிகாரிகள் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி விவசாயிகள் துண்டு விரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...