கிணத்துக்கடவில் கார் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து நாசம் - காவல்துறை விசாரணை

அரசம்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்ற ஓட்டுநர் வினோத்குமார் ஆம்புலன்ஸை பின்னோக்கி இயக்கி உள்ளார். அப்போது கோவையில் இருந்து பின்னால் வந்த கார், ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.


கோவை: உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று இரவு கோவையில் நோயாளியை இறக்கிவிட்டு மீண்டும் உடுமலைப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அப்போது பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்ற ஓட்டுநர் வினோத்குமார் ஆம்புலன்ஸை பின்னோக்கி இயக்கி உள்ளார்.



அப்போது கோவையில் இருந்து பின்னால் வந்த கார், ஆம்புலன்ஸ் மீது மோதியது.



இதில் ஆம்புலன்ஸ் மற்றும் காரும் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து மளமளவென எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்ஸில் பற்றிய எரிந்த தீயை அணைத்தனர்.



இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த ஓட்டுநர்கள் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...