வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கோவை மாநகராட்சி பொறியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை

கடந்த 21 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தநிலையில், வழக்கை நேற்று (பிப்.29) விசாரித்த நீதிபதி மோகனரம்யா, குற்றம் சாட்டப்பட்ட சங்கர நாராயணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியவர் சங்கர நாராயணன். இவர் பணியாற்றிய காலத்தில், 1995, ஏப்., முதல் டிச., 2000 வரையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கையில், சங்கர நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில், 12.57 லட்சம் ரூபாய் சொத்து குவித்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, 2002, மார்ச் 4ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர் மீது, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 21 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை நேற்று (பிப்.29) விசாரித்த நீதிபதி மோகனரம்யா, குற்றம் சாட்டப்பட்ட சங்கர நாராயணனுக்கு ஓராண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...