கோவை பூ மார்க்கெட் அருகே டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடைக்குள் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டைல்ஸ்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.


கோவை: கோவை பூ மார்க்கெட் அருகே தேவாங்க பேட்டை வீதியைச் சேர்ந்தவர் பியூஸ் ஆர். டாடேடு. இவர் அதே பகுதியில் உள்ள 3

மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் டைல்ஸ் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று (29-02-2024) காலை 9 மணியளவில் இவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த கடையில் இருந்து மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தெற்கு உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, நிலைய அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகே உள்ள கட்டிடங்களுக்கு தீ வராமல் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கடைக்குள் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டைல்ஸ்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இந்த தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்தனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...