உடுமலை அருகே அமராவதி நகரில் மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியர் – காவல்துறை விசாரணை

பயிற்சி மையத்தில் ஆங்கில ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தேவியின் மகனை பிரம்பால் அடித்ததில் மாணவனுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி நகரில் குடியிருந்து வருபவர் தேவி(37). இவரது கணவர் பிரபு ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.



அவர்கள் இருவரையும் அமராவதி நகரில் உள்ள விவேகானந்தா பயிற்சி மையத்தில் சேர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பயிற்சி மைய ஆங்கில ஆசிரியர் ராதாகிருஷ்ணன் என்பவர் தேவியின் மகனை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.



அதைத் தொடர்ந்து தேவி தனது மகனை அமராவதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அத்துடன் அமராவதி நகர் காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.



அதன் பேரில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவன் தாயார் தேவி வாட்ஸ் அப்பில் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் வருகின்றது.

வீடியோவில் கூறியதாவது, நான் குழந்தைகளை சைனிக் எனப்படும் ராணுவ பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் விவேகானந்த பயிற்சி மையத்தில் சேர்த்து இருந்தேன். நான் ஒரு வருடமாக குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்றும், முடிந்த அளவு படிக்கட்டும் என்றும் கூறியிருந்தேன். நான் சொன்னதையும் கேட்காமல் நேற்று முன்தினம் கோச்சிங் சென்டர் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் எனது மகனை அடித்து உள்ளார்.

இதனால் எனது மகனுக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து எனது மகனை அமராவதி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுடன் அமராவதி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து உள்ளேன். போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்று பாதிக்கப்பட்ட மாணவன் தாய் தேவி வாட்ஸ் அப்பில் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. உடுமலை அருகே மாணவனை பயிற்சி மைய ஆசிரியர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...