உடுமலை அருகே அமராவதி நகரில் மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியர் – காவல்துறை விசாரணை

பயிற்சி மையத்தில் ஆங்கில ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தேவியின் மகனை பிரம்பால் அடித்ததில் மாணவனுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி நகரில் குடியிருந்து வருபவர் தேவி(37). இவரது கணவர் பிரபு ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.



அவர்கள் இருவரையும் அமராவதி நகரில் உள்ள விவேகானந்தா பயிற்சி மையத்தில் சேர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பயிற்சி மைய ஆங்கில ஆசிரியர் ராதாகிருஷ்ணன் என்பவர் தேவியின் மகனை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.



அதைத் தொடர்ந்து தேவி தனது மகனை அமராவதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அத்துடன் அமராவதி நகர் காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.



அதன் பேரில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவன் தாயார் தேவி வாட்ஸ் அப்பில் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் வருகின்றது.

வீடியோவில் கூறியதாவது, நான் குழந்தைகளை சைனிக் எனப்படும் ராணுவ பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் விவேகானந்த பயிற்சி மையத்தில் சேர்த்து இருந்தேன். நான் ஒரு வருடமாக குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்றும், முடிந்த அளவு படிக்கட்டும் என்றும் கூறியிருந்தேன். நான் சொன்னதையும் கேட்காமல் நேற்று முன்தினம் கோச்சிங் சென்டர் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் எனது மகனை அடித்து உள்ளார்.

இதனால் எனது மகனுக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து எனது மகனை அமராவதி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுடன் அமராவதி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து உள்ளேன். போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்று பாதிக்கப்பட்ட மாணவன் தாய் தேவி வாட்ஸ் அப்பில் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. உடுமலை அருகே மாணவனை பயிற்சி மைய ஆசிரியர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...