வால்பாறை ஆழியார் சாலையில் நள்ளிரவில் சென்றுகொண்டிருந்த காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானைகள்

சுமார் இரவு ஒரு மணி அளவில் ஆழியார் சோதனை சாவடியை கார் கடந்து வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரின் குறுக்கே நின்று காரை தாக்கியது. இதில் காரில் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஆழியார் பகுதியில் சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையில் உலாவி வருகிறது.



இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நேற்று இரவு வால்பாறையை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது ஆம்னி காரை பழனிக்கு வாடகைக்கு சென்றுவிட்டு மீண்டும் வால்பாறைக்கு வந்து கொண்டு இருந்தார். சுமார் இரவு ஒரு மணி அளவில் ஆழியார் சோதனை சாவடியை கடந்து வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் காரின் குறுக்கே நின்று காரை தாக்கியது.

இதில் காரின் கண்ணாடி கதவு முற்றிலும் சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். காரை சாமர்த்தியமாக ஓட்டி பயணிகளின் உயிரை காப்பாற்றி ஓட்டுநர் வால்பாறை வந்து சேர்ந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இரவு நேரத்தில் ஆழியாறு சாலையில் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவித்து வருகின்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...