கோவை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை – காவல்துறையினர் விசாரணை

தியாவின் கணவருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ளது என்பது காயத்ரிக்கு தெரியவரவும், அவர்களுக்கு கருத்து வேறுபாடு வந்துள்ளது. இதனால் திருமணம் ஆகி ஒரு மாதகாலத்திற்குள் தனது தாயார் வீட்டுக்கு அவர் வந்து விட்டார். இந்நிலையில் பெற்றோருடன் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஜவகர்நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கணேசன் 65. இவரது மனைவி விமலா (55). இவரது மகள் தியா காயத்ரி (25). மூன்று பேரும் மேற்படி முகவரியில் வசித்து வருகிறார்கள். இவரது மகள் தியா காயத்ரிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி தீட்சித் என்பவருடன் திருமணம் முடிந்து இருவரும் ஐடி கம்பெனியில் வேலை செய்வதால் பெங்களூரில் வசித்து வந்தனர்.

கணேசன் என்பவர் கோவையில் புரூக் பாண்டில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். மேற்படி திருமணம் முடித்த தியா காயத்ரிக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. தியாவின் கணவருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ளது என்பது காயத்ரிக்கு தெரியவரவும், அவர்களுக்கு கருத்து வேறுபாடு வந்துள்ளது.

இதனால் திருமணம் ஆகி ஒரு மாதகாலத்திற்குள் தனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் அவரது தாயார் மற்றும் தந்தையருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.

மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததினால் மூன்று பேரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இது குறித்து சம்பவ இடத்தில் உதவி ஆணையர் மற்றும் கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளர், காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...