நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது தமிழக அரசு பழி சுமத்துகிறது -பொள்ளாச்சியில் வானதி சீனிவாசன் பேட்டி

விவசாயிகள், பெண்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அது குறித்து ஏன் தமிழக அரசு பேசுவதில்லை. மத்திய அரசு மாநில அரசுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்று அறிக்கை வெளியிட தயாரா என சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக மகளிர் அணி மாநாடு பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்திற்கு பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது., மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என கூறி வருகின்றனர். நிதி கமிஷன் என்ன வருவாய் அளவு வைத்திருக்கின்றனர். குறிப்பிட்ட வருவாயில் மத்திய அரசுக்கு மாநில அரசுக்கு என அளவீடு உள்ளது. தமிழகத்தில் இருந்து கிடைக்கக்கூடிய வருவாயில் எவ்வளவு வழங்கப்படுகிறது. அதை முறையாக வழங்கி வருகின்றனர். மத்திய அரசு தமிழகத்திற்கு நேரடியாக செயல்படுத்துகின்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் குறித்து தமிழக அரசு கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விவசாயிகளுக்கு, பெண்களுக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அது குறித்து ஏன் தமிழக அரசு பேசுவதில்லை. மத்திய அரசு மாநில அரசுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்று அறிக்கை வெளியிட தயாரா என கேள்வி எழுப்பினார். இவர்களின் நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது பழி சுமத்துவதாக வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...