உடுமலை வழியாக செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயில் வாஞ்சி மணியாச்சி வரை 28ஆம் தேதி வரை செல்லும் என அறிவிப்பு

வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதால் வருகின்ற 28-ம் தேதி வரை பாலக்காட்டில் இருந்து செல்லும் ரெயில் வாஞ்சி மணியாட்சி வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்குரிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்கு கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து நாள்தோறும் ரெயில் இயக்கப்படுகிறது. பாலக்காட்டில் புறப்படும் இந்த ரயிலானது பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி வழியாக திருச்செந்தூரை சென்றடைகிறது.

இதில் நாள்தோறும் தென் மாவட்டங்கள் மற்றும் கோவிலுக்கு ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 21-ம் தேதி முதல் வருகின்ற 28-ம் தேதி வரை பாலக்காட்டில் இருந்து செல்லும் ரெயில் வாஞ்சி மணியாட்சி வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...