பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கோவை-நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாகா்கோவில்-கோவை முன்பதிவில்லா விரைவு ரயில் (எண்: 16321) பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நாகா்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாகா்கோவில்-கோவை முன்பதிவில்லா விரைவு ரயில் (எண்: 16321) பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நாகா்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட நாள்களில், இந்த ரயிலானது திண்டுக்கல்-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். அதேபோல, கோவை-நாகா்கோவில் முன்பதிவில்லா விரைவு ரயில் (எண்: 16322) பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை திண்டுக்கல்-நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் இந்த ரயிலானது கோவை-திண்டுக்கல் இடையே மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...