பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கோவை-நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாகா்கோவில்-கோவை முன்பதிவில்லா விரைவு ரயில் (எண்: 16321) பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நாகா்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாகா்கோவில்-கோவை முன்பதிவில்லா விரைவு ரயில் (எண்: 16321) பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நாகா்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட நாள்களில், இந்த ரயிலானது திண்டுக்கல்-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். அதேபோல, கோவை-நாகா்கோவில் முன்பதிவில்லா விரைவு ரயில் (எண்: 16322) பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை திண்டுக்கல்-நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் இந்த ரயிலானது கோவை-திண்டுக்கல் இடையே மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...