கோவை பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரம் மாற்றம் – சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை-பெங்களூரு வந்தேபாரத் விரைவு ரயில் (எண்: 20642) வரும் நாள்களில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் கோவையில் காலை 5 மணிக்குப் புறப்பட்டு, காலை 11.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. இந்நிலையில், கோவையில் காலை 5.45 மணிக்கு கோவை-பெங்களூரு உதய் ரயில் இயக்கப்பட்டு வருவதால், கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என தொழில் அமைப்புகள், பயணிகள் சங்கத்தினா் சார்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை-பெங்களூரு வந்தேபாரத் விரைவு ரயில் (எண்: 20642) வரும் நாள்களில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும். 8.03 மணிக்கு திருப்பூா், 8.42 மணிக்கு ஈரோடு, 9.32-க்கு சேலம், 10.51-க்கு தருமபுரி, 12.03-க்கு ஓசூா், பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

மீண்டும் பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் 3.10 மணிக்கு ஓசூா், 4.22 மணிக்கு தருமபுரி, 5.57 மணிக்கு சேலம், 6.47 மணிக்கு ஈரோடு, 7.31 மணிக்கு திருப்பூா், இரவு 8.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...