கோவை பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரம் மாற்றம் – சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை-பெங்களூரு வந்தேபாரத் விரைவு ரயில் (எண்: 20642) வரும் நாள்களில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் கோவையில் காலை 5 மணிக்குப் புறப்பட்டு, காலை 11.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. இந்நிலையில், கோவையில் காலை 5.45 மணிக்கு கோவை-பெங்களூரு உதய் ரயில் இயக்கப்பட்டு வருவதால், கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என தொழில் அமைப்புகள், பயணிகள் சங்கத்தினா் சார்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை-பெங்களூரு வந்தேபாரத் விரைவு ரயில் (எண்: 20642) வரும் நாள்களில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும். 8.03 மணிக்கு திருப்பூா், 8.42 மணிக்கு ஈரோடு, 9.32-க்கு சேலம், 10.51-க்கு தருமபுரி, 12.03-க்கு ஓசூா், பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

மீண்டும் பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் 3.10 மணிக்கு ஓசூா், 4.22 மணிக்கு தருமபுரி, 5.57 மணிக்கு சேலம், 6.47 மணிக்கு ஈரோடு, 7.31 மணிக்கு திருப்பூா், இரவு 8.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...