கோவை பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரம் மாற்றம் – சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை-பெங்களூரு வந்தேபாரத் விரைவு ரயில் (எண்: 20642) வரும் நாள்களில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் கோவையில் காலை 5 மணிக்குப் புறப்பட்டு, காலை 11.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. இந்நிலையில், கோவையில் காலை 5.45 மணிக்கு கோவை-பெங்களூரு உதய் ரயில் இயக்கப்பட்டு வருவதால், கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என தொழில் அமைப்புகள், பயணிகள் சங்கத்தினா் சார்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை-பெங்களூரு வந்தேபாரத் விரைவு ரயில் (எண்: 20642) வரும் நாள்களில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும். 8.03 மணிக்கு திருப்பூா், 8.42 மணிக்கு ஈரோடு, 9.32-க்கு சேலம், 10.51-க்கு தருமபுரி, 12.03-க்கு ஓசூா், பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

மீண்டும் பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் 3.10 மணிக்கு ஓசூா், 4.22 மணிக்கு தருமபுரி, 5.57 மணிக்கு சேலம், 6.47 மணிக்கு ஈரோடு, 7.31 மணிக்கு திருப்பூா், இரவு 8.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...