தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு

இரண்டாவது நாளாக இன்று தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரப்பணிகள் குறித்தும், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கடந்த மாதம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இன்றைய தினம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று காலை 9.00 மணி முதல் இன்று காலை 9.00 மணி வரை பல்வேறு அரசுதுறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.



இரண்டாவது நாளாக இன்று தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரப்பணிகள் குறித்தும், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடினார். தாராபுரம் ஊழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்கள். நஞ்சியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நஞ்சியம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், பொதுமேலாளர் (ஆவின்) சுஜாதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...