உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களின் வீடியோ வைரல்

கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் திருட்டில் ஈடுபடுவதால், குடிமங்கலம் காவல்துறையினர் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஊராட்சியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஊராட்சியை சுற்றி ஏராளமான நூற்பாலைகளும், தொழிற்சாலைகளும் அதிக அளவு இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் திருட்டில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து குடிமங்கலம் காவல்துறையிடம் பொதுமக்கள் தரப்பில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என குடியிருப்பு பகுதியில் சுற்றிதிரியும் மர்மநபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அனுப்பியும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாமல் அலட்சியமாக உள்ளனர்.

இதனால் இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட குடிமங்கலம் காவல்துறையினர் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர். கடற்கரையில் மர்ம நபர் திருட முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...