உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களின் வீடியோ வைரல்

கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் திருட்டில் ஈடுபடுவதால், குடிமங்கலம் காவல்துறையினர் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஊராட்சியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஊராட்சியை சுற்றி ஏராளமான நூற்பாலைகளும், தொழிற்சாலைகளும் அதிக அளவு இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் திருட்டில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து குடிமங்கலம் காவல்துறையிடம் பொதுமக்கள் தரப்பில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என குடியிருப்பு பகுதியில் சுற்றிதிரியும் மர்மநபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அனுப்பியும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாமல் அலட்சியமாக உள்ளனர்.

இதனால் இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட குடிமங்கலம் காவல்துறையினர் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர். கடற்கரையில் மர்ம நபர் திருட முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...