சசிகுமார் கொலையில் தேடப்படும் நபர்களின் புகைப்படங்கள் துண்டு பிரசுரங்களில் வெளியீடு

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யபட்டார். 

இந்த கொலை வழக்கு குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

முன்னதாக சசி குமார் கொலை செய்யப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளின் மூலம் விசாரணை செய்த போலீசார் அதில் சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர்.  

தொடர்ந்து, தங்களுக்கும் இந்த கொலைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று அப்புகைப்படத்தில் இருந்த நபர்கள் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் வந்து ஒப்புதல் கொடுத்தனர். இதன் பின்னர், கொலை வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சசிகுமார் கொலை தொடர்பாக தேடப்பட்டுவரும் நபர்களின் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி.  போலீசார் வெளியிட்டனர். இதுவரை துப்பு ஏதும் கிடைக்காததால் தற்போது தேடப்படும் நபர்களின் விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். 

தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த அறிவிப்பில், கோவை சாய்பாபா காலனி பகுதிய சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரது மகன் முபாரக் (37) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பர்கத்துல்லா என்பவரது மகன் சதாம் உசேன் (25) ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. 

பொதுமக்களுக்கு இந்த நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளும்படியும், தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

( தொலைபேசி எண்கள் : 9498104409 / 9498174230 / 0422-2241752 / 044-28512510 )

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...