கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தமிழக-கேரள காவல் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்

தமிழக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் கே.பவானிஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலை சுமூகமான முறையில் நடத்துவது குறித்தும், தமிழகம் மற்றும் கேரளத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


கோவை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தமிழக-கேரள காவல் உயா் அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று (பிப்.19) நடைபெற்றது. தமிழக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் கே.பவானிஸ்வரி தலைமையில், கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலை சுமூகமான முறையில் நடத்துவது குறித்தும், தமிழகம் மற்றும் கேரளத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையே தடை செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் மதுபானங்கள் கடத்தலை குறைப்பது குறித்தும், மக்களவைத் தோ்தலின்போது குழப்பம் ஏற்படுத்தி வன்முறையை தூண்டி தோ்தலை சீா்குலைக்கும் எண்ணத்தை உடையவா்களை கண்காணிப்பது குறித்தும், மாநிலங்களுக்கு இடையேயான நுண்ணறிவு தகவல்களை பகிர்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல, தோ்தலின்போது மாநில எல்லைகளில் நடைபெறும் குற்றங்களைத் தடுத்திட சோதனைச் சாவடிகள் மற்றும் தாற்காலிக சோதனைச் சாவடிகள் அமைப்பது குறித்தும், வாக்காளா்களை அச்சுறுத்தும் இயக்கங்கள் குறித்தும், தோ்தலின்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் அ.சரவணசுந்தா், கேரள மாநிலம் திருச்சூா் சரக காவல் துறை துணைத் தலைவா் அஜுதா பேகம், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன், திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, பாலக்காடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆனந்த் மற்றும் திருச்சூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நவநீத ஷா்மா ஆகியோருடன் கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் உதவி கலால் ஆணையா் ஆகியோர் கலந்து கொண்டனா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...