கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தமிழக-கேரள காவல் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்

தமிழக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் கே.பவானிஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலை சுமூகமான முறையில் நடத்துவது குறித்தும், தமிழகம் மற்றும் கேரளத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


கோவை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தமிழக-கேரள காவல் உயா் அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று (பிப்.19) நடைபெற்றது. தமிழக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் கே.பவானிஸ்வரி தலைமையில், கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலை சுமூகமான முறையில் நடத்துவது குறித்தும், தமிழகம் மற்றும் கேரளத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையே தடை செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் மதுபானங்கள் கடத்தலை குறைப்பது குறித்தும், மக்களவைத் தோ்தலின்போது குழப்பம் ஏற்படுத்தி வன்முறையை தூண்டி தோ்தலை சீா்குலைக்கும் எண்ணத்தை உடையவா்களை கண்காணிப்பது குறித்தும், மாநிலங்களுக்கு இடையேயான நுண்ணறிவு தகவல்களை பகிர்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல, தோ்தலின்போது மாநில எல்லைகளில் நடைபெறும் குற்றங்களைத் தடுத்திட சோதனைச் சாவடிகள் மற்றும் தாற்காலிக சோதனைச் சாவடிகள் அமைப்பது குறித்தும், வாக்காளா்களை அச்சுறுத்தும் இயக்கங்கள் குறித்தும், தோ்தலின்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் அ.சரவணசுந்தா், கேரள மாநிலம் திருச்சூா் சரக காவல் துறை துணைத் தலைவா் அஜுதா பேகம், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன், திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, பாலக்காடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆனந்த் மற்றும் திருச்சூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நவநீத ஷா்மா ஆகியோருடன் கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் உதவி கலால் ஆணையா் ஆகியோர் கலந்து கொண்டனா்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...