கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் சிகரம் கலைக்குழுவினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வள்ளிக் கும்மி பயிற்சி

சுப்பிரமணியம்பாளையத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கலைக்குழு ஆசிரியர் ஆ.அருண்குமார், வள்ளி கும்மி ஆசிரியர் கிணத்துக்கடவு இரத்தினசாமி வாத்தியார், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ரேவதி மற்றும் குழுவினர் தலைமையில் வள்ளி கும்மி பயிற்சி தொடங்கப்பட்டது.


கோவை: கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் சிகரம் கலைக்குழுவினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வள்ளிக் கும்மி மற்றும் ஒயிலாட்ட பயிற்சி வழங்கினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். கோவையில் சிகரம் கலைக்குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கலைக்குழு வாயிலாக தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான ஒயிலாட்டம், வள்ளி கும்மி, ஜமாப் மற்றும் காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இலவசமாக அளித்து பல்வேறு இடங்களில் அரங்கேற்றம் நிகழ்த்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம், சுப்பிரமணியம்பாளையத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கலைக்குழு ஆசிரியர் ஆ.அருண்குமார், வள்ளி கும்மி ஆசிரியர் கிணத்துக்கடவு இரத்தினசாமி வாத்தியார், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ரேவதி மற்றும் குழுவினர் தலைமையில் வள்ளி கும்மி பயிற்சி துவங்கப்பட்டது.

தொடர்ந்து ஒயிலாட்டமும் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் 5 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...