கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் சிகரம் கலைக்குழுவினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வள்ளிக் கும்மி பயிற்சி

சுப்பிரமணியம்பாளையத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கலைக்குழு ஆசிரியர் ஆ.அருண்குமார், வள்ளி கும்மி ஆசிரியர் கிணத்துக்கடவு இரத்தினசாமி வாத்தியார், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ரேவதி மற்றும் குழுவினர் தலைமையில் வள்ளி கும்மி பயிற்சி தொடங்கப்பட்டது.


கோவை: கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் சிகரம் கலைக்குழுவினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வள்ளிக் கும்மி மற்றும் ஒயிலாட்ட பயிற்சி வழங்கினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். கோவையில் சிகரம் கலைக்குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கலைக்குழு வாயிலாக தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான ஒயிலாட்டம், வள்ளி கும்மி, ஜமாப் மற்றும் காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இலவசமாக அளித்து பல்வேறு இடங்களில் அரங்கேற்றம் நிகழ்த்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம், சுப்பிரமணியம்பாளையத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கலைக்குழு ஆசிரியர் ஆ.அருண்குமார், வள்ளி கும்மி ஆசிரியர் கிணத்துக்கடவு இரத்தினசாமி வாத்தியார், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ரேவதி மற்றும் குழுவினர் தலைமையில் வள்ளி கும்மி பயிற்சி துவங்கப்பட்டது.

தொடர்ந்து ஒயிலாட்டமும் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் 5 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...