சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் விழிப்புணர்வு

மேற்கத்திய நாடுகளுக்கு ஈடாக தற்போது இந்தியாவிலும் புற்றுநோய் சிகிச்சைகளின் தரம் அதிகரித்துள்ளது. அவை அனைத்தும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த கவனிப்புடன் சென்றடைய வேண்டும் என்று ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறினார்.


கோவை: சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் தினம் வருடம் தோறும், பிப்ரவரி மாதம் 15ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் விரைவான நோயறிதல் மற்றும் சிகிச்சையை அணுக வேண்டும் என்பதும், அவர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதுமே இதன் முக்கியமான நோக்கம்.

இதனை முன்னிட்டு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், பிப்ரவரி மாதம் 17ம் தேதி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற மற்றும் பெற்று வரும் 35 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி, டாக்டர் ரகுபதி வேலுசாமி ஆகியோர் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினர். சென்னை, கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி பாஸ்கரன் கண்னூன் மற்றும் புற்றுநோய் துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவிலும், இதன் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. குழந்தைகள் புற்றுநோய்களில், லுகீமியா எனப்படும் ரத்த புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த வகை புற்றுநோய், எவ்வளவு விரைவில் கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு குணப்படுத்தும் சதவீதம் அதிகமாக இருக்கும்.

இதுகுறித்து, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி, டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறியதாவது, மேற்கத்தைய நாடுகளுக்கு ஈடாக தற்போது இந்தியாவிலும் புற்றுநோய் சிகிச்சைகளின் தரம் அதிகரித்துள்ளது. அவை அனைத்தும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த கவனிப்புடன் சென்றடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். புற்று நோய் மருத்துவத்திற்கென்றே, வளவாடி நாராயணசாமி புற்று நோய் மையம், 1958 ஆம் ஆண்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனை, கோவையில் நிறுவப்பட்டது.

தற்போது, அதிநவீன வசதிகளுடன் கூடிய புற்று நோய் மருத்துவப் பிரிவு சிறப்பாக செயல்படுகிறது. ஜி.கே.என்.எம் தொண்டு அறக்கட்டளையின் சார்பாகவும் பல்வேறு நன்கொடையாளர்களுடன் இணைந்தும் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளில் பலதரப்பட்ட சலுகைகளும், முற்றிலும் இலவச சிகிச்சைகளும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய நன்கொடையாளர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்கள். குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகளும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...