குண்டடத்தில் ரேக்ளா பந்தயத்தில் துள்ளி குதித்து சென்ற காளைகள் – உற்சாகத்துடன் பொது மக்கள் கண்டுகளிப்பு

200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் அடிப்படையில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் கோவை, திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் எரகாம்பட்டி நல்லமங்கை உடனமர் நாகேஸ்வரசுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் செம்மேகவுண்டன்பாளையம் சாலை முதல் வெறுவேடம்பாளையம் சாலை வரையில் 48 ஊர் கிராம மக்கள் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

போட்டியில் 400 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. நேர ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயத்தில் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் அடிப்படையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கோவை, திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

200 மீட்டர் போட்டிகளை சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் மற்றும் நந்தவனம்பாளையம் தலைவர் தனசெல்வி நாச்சிமுத்து ஆகியோரும், 300 மீட்டர் பந்தயங்களை குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், துணைத் தலைவர் மனோரஞ்சிதம் மகேஷ் ஆகியோரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இப்போட்டிகளில் 200 மீட்டர் பிரிவு 300 மீட்டர் பிரிவுகளில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு தங்ககாசு, நினைவு கோப்பை, நினைவுபரிசு, மெடல் ஆகியவற்றை 48 ஊர் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த ரேக்ளா பந்தயத்தை காண குண்டடம், எரகாம்பட்டி, மேட்டுக்கடை, ருத்ராவதி, கள்ளிவலசு, பூளவாடி, தாராபுரம், பல்லடம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேக்ளா பந்தயத்தை கண்டுகளித்தனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...