குண்டடத்தில் ரேக்ளா பந்தயத்தில் துள்ளி குதித்து சென்ற காளைகள் – உற்சாகத்துடன் பொது மக்கள் கண்டுகளிப்பு

200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் அடிப்படையில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் கோவை, திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் எரகாம்பட்டி நல்லமங்கை உடனமர் நாகேஸ்வரசுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் செம்மேகவுண்டன்பாளையம் சாலை முதல் வெறுவேடம்பாளையம் சாலை வரையில் 48 ஊர் கிராம மக்கள் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

போட்டியில் 400 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. நேர ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயத்தில் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் அடிப்படையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கோவை, திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

200 மீட்டர் போட்டிகளை சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் மற்றும் நந்தவனம்பாளையம் தலைவர் தனசெல்வி நாச்சிமுத்து ஆகியோரும், 300 மீட்டர் பந்தயங்களை குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், துணைத் தலைவர் மனோரஞ்சிதம் மகேஷ் ஆகியோரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இப்போட்டிகளில் 200 மீட்டர் பிரிவு 300 மீட்டர் பிரிவுகளில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு தங்ககாசு, நினைவு கோப்பை, நினைவுபரிசு, மெடல் ஆகியவற்றை 48 ஊர் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த ரேக்ளா பந்தயத்தை காண குண்டடம், எரகாம்பட்டி, மேட்டுக்கடை, ருத்ராவதி, கள்ளிவலசு, பூளவாடி, தாராபுரம், பல்லடம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேக்ளா பந்தயத்தை கண்டுகளித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...