கோவையில் நாளை முதல் சிறப்பு வரிவசூல் முகாம் – மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவிப்பு

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலி இட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வருகினங்களை செலுத்த மாநகராட்சி வார்டு பகுதிகளில் பிப்ரவரி 17, 18-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.


கோவை: 2023-2024 நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலி இட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வருகினங்களை செலுத்த மக்களின் வசதிக்காக மாநகராட்சி வார்டு பகுதிகளில் பிப்ரவரி 17, 18-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி, மேற்கு மண்டலத்தில் 35-வது வார்டில் லட்சுமி நகர், இடையார்பாளையம் அண்ணா நகர், செக் போஸ்ட் எதிர்புறம் விநாயகர் கோயில் வளாகம், 42வது வார்டு கோவில் மேடு வளாகம், 74வது வார்டு நாயக்கர் தோட்ட சமுதாயக்கூடம், 33வது வார்டு எஸ்.கே.ஆர்.நகர் சமுதாயக்கூடம்.

கிழக்கு மண்டலத்தில் 7 மற்றும் 8வது வார்டு பகுதிகளில் நேரு நகர் கிழக்கு, 24வது வார்டு குருசாமி நகர், 56வது வார்டு ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம், 57வது வார்டு நெசவாளர் காலனி.

தெற்கு மண்டலத்தில் 97வது வார்டு பிள்ளையார்புரம், 100வது வார்டு மேட்டூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. வடக்கு மண்டலத்தில் 15வது வார்டு சுப்பிரமணியம் பாளையம் அங்கன்வாடி மையம், 19வது வார்டு மணியக்காரம்பாளையம் அம்மா உணவகம், 25வது வார்டு காந்தி மாநகர் அரசு ஆரம்ப பள்ளி.

மத்திய மண்டலத்தில் 32 வது வார்டு நாராயணசாமி வீதியில் உள்ள சிறுவர் பூங்கா, 62வது வார்டு பெருமாள் கோயில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், 80வது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, 84வது வார்டு ஜி.எம் நகரில் உள்ள தர்ஹத் இஸ்லாம் ஆரம்ப பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளன என கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் நேற்று (பிப்.15) தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...