கோவையில் நாளை முதல் சிறப்பு வரிவசூல் முகாம் – மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவிப்பு

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலி இட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வருகினங்களை செலுத்த மாநகராட்சி வார்டு பகுதிகளில் பிப்ரவரி 17, 18-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.


கோவை: 2023-2024 நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலி இட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வருகினங்களை செலுத்த மக்களின் வசதிக்காக மாநகராட்சி வார்டு பகுதிகளில் பிப்ரவரி 17, 18-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி, மேற்கு மண்டலத்தில் 35-வது வார்டில் லட்சுமி நகர், இடையார்பாளையம் அண்ணா நகர், செக் போஸ்ட் எதிர்புறம் விநாயகர் கோயில் வளாகம், 42வது வார்டு கோவில் மேடு வளாகம், 74வது வார்டு நாயக்கர் தோட்ட சமுதாயக்கூடம், 33வது வார்டு எஸ்.கே.ஆர்.நகர் சமுதாயக்கூடம்.

கிழக்கு மண்டலத்தில் 7 மற்றும் 8வது வார்டு பகுதிகளில் நேரு நகர் கிழக்கு, 24வது வார்டு குருசாமி நகர், 56வது வார்டு ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம், 57வது வார்டு நெசவாளர் காலனி.

தெற்கு மண்டலத்தில் 97வது வார்டு பிள்ளையார்புரம், 100வது வார்டு மேட்டூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. வடக்கு மண்டலத்தில் 15வது வார்டு சுப்பிரமணியம் பாளையம் அங்கன்வாடி மையம், 19வது வார்டு மணியக்காரம்பாளையம் அம்மா உணவகம், 25வது வார்டு காந்தி மாநகர் அரசு ஆரம்ப பள்ளி.

மத்திய மண்டலத்தில் 32 வது வார்டு நாராயணசாமி வீதியில் உள்ள சிறுவர் பூங்கா, 62வது வார்டு பெருமாள் கோயில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், 80வது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, 84வது வார்டு ஜி.எம் நகரில் உள்ள தர்ஹத் இஸ்லாம் ஆரம்ப பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளன என கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் நேற்று (பிப்.15) தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...