கோவை கோனியம்மன் கோயில் திருவிழா - உள்ளூா் விடுமுறை அளிக்க எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பு கோரிக்கை

கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என கோவை ஆட்சியரிடம் எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கோவையின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் கோனியம்மன் கோயில் டவுன்ஹாலில் அமைந்துள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, கோவையில் உள்ளூா் விடுமுறை அளிக்க வலியுறுத்தி எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பு சார்பில் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று (பிப்.15) மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வா். மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களின் தோ்த் திருவிழாவின்போது உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், கேரளத்தில் பிரபல பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு கோவையில் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதேபோல, கோவையின் முக்கிய கோயிலான கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...