கோவை கோனியம்மன் கோயில் திருவிழா - உள்ளூா் விடுமுறை அளிக்க எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பு கோரிக்கை

கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என கோவை ஆட்சியரிடம் எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கோவையின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் கோனியம்மன் கோயில் டவுன்ஹாலில் அமைந்துள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, கோவையில் உள்ளூா் விடுமுறை அளிக்க வலியுறுத்தி எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பு சார்பில் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று (பிப்.15) மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வா். மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களின் தோ்த் திருவிழாவின்போது உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், கேரளத்தில் பிரபல பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு கோவையில் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதேபோல, கோவையின் முக்கிய கோயிலான கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...