கோவை கோனியம்மன் கோயில் திருவிழா - உள்ளூா் விடுமுறை அளிக்க எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பு கோரிக்கை

கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என கோவை ஆட்சியரிடம் எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கோவையின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் கோனியம்மன் கோயில் டவுன்ஹாலில் அமைந்துள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, கோவையில் உள்ளூா் விடுமுறை அளிக்க வலியுறுத்தி எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பு சார்பில் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று (பிப்.15) மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வா். மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களின் தோ்த் திருவிழாவின்போது உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், கேரளத்தில் பிரபல பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு கோவையில் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதேபோல, கோவையின் முக்கிய கோயிலான கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...