மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

முப்பெரும் விழாவில் உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கமும், கட்டுப்பாடும் வாழ்வில் இன்றியமையாத ஒன்று என மாணவர்களுக்கு கருத்துக்களை கூறினார்.


திருப்பூர்: மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிறைவிழா, விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.

மடத்துக்குளம் பேரூராட்சி தலைவர் கலைவாணி பாலமுரளி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் பத்ரி நாராயணன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் வாழ்வில் இன்றியமையாத ஒன்று என கருத்துக்களை கூறினார்.



மேலும் நீதிபதிகள் விஜயகுமார், பாலமுருகன், மீனாட்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவரும், வழக்கறிஞர் அரசு வழக்கறிஞருமான டி.ஆர். மனோகரன் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பேசினார்.

எஸ்.எம்.சி. தலைவர் கவிதா மற்றும் உறுப்பினர்கள் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மடத்துக்குளம் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர். இலக்கியம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

100 சதவீதம் வருகை புரிந்தோர், அரையாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அரசு மேல்நிலைப்பள்ளி மடத்துகுளத்திற்கு அருகில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டு இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கி கௌரவத்தினர். இதில், மாணவர்களின் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர் நிறைவாக பட்டதாரி ஆசிரியர் உமா நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...