மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

முப்பெரும் விழாவில் உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கமும், கட்டுப்பாடும் வாழ்வில் இன்றியமையாத ஒன்று என மாணவர்களுக்கு கருத்துக்களை கூறினார்.


திருப்பூர்: மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிறைவிழா, விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.

மடத்துக்குளம் பேரூராட்சி தலைவர் கலைவாணி பாலமுரளி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் பத்ரி நாராயணன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் வாழ்வில் இன்றியமையாத ஒன்று என கருத்துக்களை கூறினார்.



மேலும் நீதிபதிகள் விஜயகுமார், பாலமுருகன், மீனாட்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவரும், வழக்கறிஞர் அரசு வழக்கறிஞருமான டி.ஆர். மனோகரன் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பேசினார்.

எஸ்.எம்.சி. தலைவர் கவிதா மற்றும் உறுப்பினர்கள் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மடத்துக்குளம் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர். இலக்கியம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

100 சதவீதம் வருகை புரிந்தோர், அரையாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அரசு மேல்நிலைப்பள்ளி மடத்துகுளத்திற்கு அருகில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டு இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கி கௌரவத்தினர். இதில், மாணவர்களின் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர் நிறைவாக பட்டதாரி ஆசிரியர் உமா நன்றி கூறினார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...