போதிய மழையின்றி வறட்சியின் பிடியில் சிக்கிய வால்பாறை அணைகள்

வால்பாறை வட்டாரத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்ததால் வால்பாறையில் அமைந்துள்ள சோலையார் அணை, நீரார்அணை, சின்னக்கல்லார் அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அணைகள் வறண்ட மண்மேடுகளாக காட்சியளிக்கின்றது.

 

வால்பாறையில் ஆண்டுதோறும்  ஜுன் மாதம் மழை தொடங்கி 6 மாதங்களுக்கு விட்டுவிட்டு பெய்துவரும். இந்த ஆண்டு சோலையார் அணை முழு கொள்ளளவான 160 அடியில் 131 அடியைமட்டுமே எட்டியுள்ளது. இதனால் மாணாம்பள்ளி, சோலையார் அணையில் உள்ள 2 நீர் மின்நிலையங்களும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 



கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் கடைசியிலேயே சோலையார் ஆணை முழுகொள்ளளவை எட்டி 123 நாட்கள் முழுகொள்ளளவிலேயே இருந்த நிலையில் அணை மூன்று முறை திரந்து விடப்பட்டது.



2015-ம் ஆண்டும் அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டியதால் ஒரு முறை திறந்து  விடப்பட்ட நிலையில் மழை குறைவால் நீர்வரத்து குறையத் தொடங்கியது.



ஆனால் இந்த ஆண்டு ஜுன் முதல் ஆண்டு இறுதி வரையிலும் அதிகமழை பெய்யாதிருப்பதால் வால்பாறை சோலையார் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையின் நீர்மட்டம் 3.34 அடியில் உள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...