வீரோ கே வீர் இந்தியக் கட்சி 2024ல் எம்.பி தேர்தலில் தனித்து போட்டியிடும் என கோவையில் நிர்வாகிகள் அறிவிப்பு

கறைபடிந்த அரசியலை சுத்தம் செய்ய வேண்டுமானால், நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்பினால், இம்முறை 2024 இல் "வீரோ கே வீர் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கோவை மாவட்ட எம்.பி வேட்பாளர் ரிச்சர்ட் வின்சன்ட் தெரிவித்தார்.


கோவை: இந்தியாவிலேயே முதன்முறையாக "வீரோ கே வீர்” இந்தியக் கட்சி 2024ல் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் 543 இடங்களிலும் ஓய்வு பெற்ற முப்படை இராணுவ வீரர்கள் எம்.பி வேட்பாளர்களாக போட்டியிட இருக்கிறார்கள். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று(பிப்.14) காலை கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெற்றது.



இது குறித்து, வீரோ கே கேர் கட்சியின் கோவை மாவட்ட எம்.பி வேட்பாளர் ரிச்சர்ட் வின்சன்ட் கூறுகையில், தேசமும், அதன் நாட்டு மக்களும் இந்தியாவின் முப்படை இராணுவ வீரர்களைப் பற்றி முற்றிலும் பெருமை பாராட்டுகிறார்கள். ஏனெனில் இராணுவ வீரர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள், உண்மையுள்ளவர்கள், ஒழுக்கமானவர்கள், படித்தவர்கள்.

2024ல் தேர்தலில் போட்டியிடும் 'வீரோ கே வீர்" இந்திய கட்சி இந்தியாவை வலிமையான மற்றும் வளர்ந்த தேசமாக உருவாக்க வேண்டும். இந்தியாவின் முப்படை இராணுவ வீரர்கள் நாட்டிற்கு தங்களின் வாழ்வின் பொற்காலத்தைக் கொடுத்துள்ளார்கள், எனவே முப்படை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே நாட்டின் பொன்னான நேரத்தைக் கொண்டு வர முடியும்.

கறைபடிந்த அரசியலை சுத்தம் செய்ய வேண்டுமானால், நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்பினால், இம்முறை 2024 இல் "வீரோ கே வீர எம். பி. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...