வீரோ கே வீர் இந்தியக் கட்சி 2024ல் எம்.பி தேர்தலில் தனித்து போட்டியிடும் என கோவையில் நிர்வாகிகள் அறிவிப்பு

கறைபடிந்த அரசியலை சுத்தம் செய்ய வேண்டுமானால், நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்பினால், இம்முறை 2024 இல் "வீரோ கே வீர் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கோவை மாவட்ட எம்.பி வேட்பாளர் ரிச்சர்ட் வின்சன்ட் தெரிவித்தார்.


கோவை: இந்தியாவிலேயே முதன்முறையாக "வீரோ கே வீர்” இந்தியக் கட்சி 2024ல் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் 543 இடங்களிலும் ஓய்வு பெற்ற முப்படை இராணுவ வீரர்கள் எம்.பி வேட்பாளர்களாக போட்டியிட இருக்கிறார்கள். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று(பிப்.14) காலை கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெற்றது.



இது குறித்து, வீரோ கே கேர் கட்சியின் கோவை மாவட்ட எம்.பி வேட்பாளர் ரிச்சர்ட் வின்சன்ட் கூறுகையில், தேசமும், அதன் நாட்டு மக்களும் இந்தியாவின் முப்படை இராணுவ வீரர்களைப் பற்றி முற்றிலும் பெருமை பாராட்டுகிறார்கள். ஏனெனில் இராணுவ வீரர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள், உண்மையுள்ளவர்கள், ஒழுக்கமானவர்கள், படித்தவர்கள்.

2024ல் தேர்தலில் போட்டியிடும் 'வீரோ கே வீர்" இந்திய கட்சி இந்தியாவை வலிமையான மற்றும் வளர்ந்த தேசமாக உருவாக்க வேண்டும். இந்தியாவின் முப்படை இராணுவ வீரர்கள் நாட்டிற்கு தங்களின் வாழ்வின் பொற்காலத்தைக் கொடுத்துள்ளார்கள், எனவே முப்படை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே நாட்டின் பொன்னான நேரத்தைக் கொண்டு வர முடியும்.

கறைபடிந்த அரசியலை சுத்தம் செய்ய வேண்டுமானால், நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்பினால், இம்முறை 2024 இல் "வீரோ கே வீர எம். பி. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...