பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பார்க் கல்வி குழுமங்களின் CEO Dr. அனுஷா ரவி தலைமையேற்றார். மாணவர்களுக்கு வினாடி வினா, பேச்சு, ஓவிய போட்டிகள் நடந்தன. 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.


Coimbatore: கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியின் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை சார்பாக உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தலைமையேற்று உரையாற்றினார்.

விழாவில் பொறியியல் கல்வி பயில்கின்ற அனைத்து துறை மாணவர்களும் கலந்து கொண்டனர். Dr. அனுஷா ரவி தனது உரையில், தண்ணீரின் முக்கியத்துவம், அதை சேமிப்பது, பாதுகாப்பது குறித்தும், மரங்களை நட்டு புதிய வனங்களை உருவாக்குவது, இருக்கின்ற வளங்களை பாதுகாப்பது குறித்தும் மாணவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.



விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் முன்னாள் மாணவர் மற்றும் TUV இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டாளர் ரஞ்சித் குமார் சின்னசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை மாணவர்களின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

உலக தண்ணீர் தினம் மற்றும் வனங்கள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியருக்கு வினாடி வினா, பேச்சு போட்டி, ஓவிய போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரியின் முதல்வர் Dr. கே குமரேசன் வாழ்த்துரை வழங்கினார்.



விழாவை சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் தலைவர் Dr. சி அங்காளபரமேஸ்வரி, துணைத்தலைவர் Dr. ஆர் ஹரிஷ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏ ராஜா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவின் போது விருந்தினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நட்டு விழாவை சிறப்பித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைய தலைமுறையின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...