கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேன்சி கடையில் தீ விபத்து

தீ விபத்தில் பேன்சி கடைக்குள் இருந்த பொருட்கள் முற்றிலும் கருகி தீக்கிரையாகின. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள துடியலூர் போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை தொப்பம்பட்டி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பேன்சி கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று (பிப்.12) இரவு வழக்கம் போல் கடையின் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.



இதனைப் பார்த்து அக்கம்பக்கதினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்பு துறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் பேன்சி கடைக்குள் இருந்த பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி தீக்கிரையாகின. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள துடியலூர் போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...