அடுத்து வரும் இரண்டு மாதங்கள் மிக முக்கியமான மாதங்கள் – கோவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு

கோவை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், எனது வீட்டிலும், நமது முதல்வர் வீட்டிலும் அதிகம் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்கின்ற பொருட்களை தான் பயன்படுத்துகிறோம் எனவும் அமைச்சர் உதயநிதி கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சி மற்றும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.780 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை அமைச்சர் உதயநிதி கோவையில் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி, கோவை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இந்த குடிநீர் அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்,

எனது வீட்டிலும், நமது முதல்வர் வீட்டிலும் அதிகம் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்கின்ற பொருட்களை தான் பயன்படுத்துகிறோம் எனவும் கூறினார்.



மேலும் சீரான குடிநீர் விநியோகத்தை தமிழகம் முழுவதும் திமுக அரசு சிறப்பாக செய்து கொண்டிருபதாவகவும், இன்று தமிழ்நாடு வேகமான வளர்ச்சியை அடைந்து வருவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் தான் அனைத்து நகரங்களும் சீராக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் உதயநிதி, மற்ற மாநிலங்களை விட சிறப்பான வளர்ச்சியை தமிழகம் அடைந்து, மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இந்த திராவிட மாடல் அரசு விளங்கி வருவதகாவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 5 வருடத்தில் ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக கொடுத்துள்ளதகாவும், ஆனால் நமக்கு திருப்பி தந்தது ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் அடுத்த இரண்டு மாதம் மிக முக்கியமான மாதம் எனவும்,

கடந்த காலங்களில் இங்கு சிறு, சிறு தவறுகள் இருந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு, அனைத்து நிர்வாகிகளும் நமது திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...