வ.உ.சி. மைதானத்தில் கோவை சங்கமம் விழா- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி

கலைத்திருவிழாவில் 20 கலைக் குழுவினரின் நையாண்டி மேளம், தோடா் நடனம், பரதம், துடும்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.


கோவை: கோவையில் தமிழ் மண்ணின் கலைகளைக் கொண்டாடும் வகையில் 2 நாள்கள் நடைபெறும் கோயம்புத்தூா் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நேற்று (பிப்.10) தொடங்கியது.



கோவை மண்டல கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவை ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தொடங்கிவைத்து, 2022-23, 2023-24 ஆம் ஆண்டுக்கான கலை விருதாளா்களுக்கு விருது, விருதுத் தொகையை வழங்கினார்.

இதில் வீணை, நாடகம், குரலிசை, மேடை நாடகம், பரதம், நாட்டுப்புற நடனக் கலைஞா்களான எஸ்.ராதா வெங்கடேசன், அ.ராஜகோபால், குன்றக்குடி டி.எஸ்.ராமமூா்த்தி, கே.எஸ்.ரகுநாத், ஜி.டி.ராஜேந்திரன், கி.தங்கவேல், டி.பாபு, ம.ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஸ்ரீராம், மா.சரவணகுமார், நா.நவீன், அருண்குமார், கு.ஹா்சிதா, சி.பி.சுதந்திர நாச்சினி, எஸ்.கௌசிகா உள்ளிட்டோர் கலை முதுமணி, கலை நன்மணி, கலைச் சுடா்மணி, கலை வளா்மணி, கலை இளமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றனா்.



ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11) இன்று வரை நடைபெறும் இந்த விழாவில் 20 கலைக் குழுக்கள் பங்கேற்று, நையாண்டி மேளம், தோடா் நடனம், பரதம், துடும்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனா்.

மேலும் இதில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் வ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...