வ.உ.சி. மைதானத்தில் கோவை சங்கமம் விழா- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி

கலைத்திருவிழாவில் 20 கலைக் குழுவினரின் நையாண்டி மேளம், தோடா் நடனம், பரதம், துடும்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.


கோவை: கோவையில் தமிழ் மண்ணின் கலைகளைக் கொண்டாடும் வகையில் 2 நாள்கள் நடைபெறும் கோயம்புத்தூா் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நேற்று (பிப்.10) தொடங்கியது.



கோவை மண்டல கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவை ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தொடங்கிவைத்து, 2022-23, 2023-24 ஆம் ஆண்டுக்கான கலை விருதாளா்களுக்கு விருது, விருதுத் தொகையை வழங்கினார்.

இதில் வீணை, நாடகம், குரலிசை, மேடை நாடகம், பரதம், நாட்டுப்புற நடனக் கலைஞா்களான எஸ்.ராதா வெங்கடேசன், அ.ராஜகோபால், குன்றக்குடி டி.எஸ்.ராமமூா்த்தி, கே.எஸ்.ரகுநாத், ஜி.டி.ராஜேந்திரன், கி.தங்கவேல், டி.பாபு, ம.ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஸ்ரீராம், மா.சரவணகுமார், நா.நவீன், அருண்குமார், கு.ஹா்சிதா, சி.பி.சுதந்திர நாச்சினி, எஸ்.கௌசிகா உள்ளிட்டோர் கலை முதுமணி, கலை நன்மணி, கலைச் சுடா்மணி, கலை வளா்மணி, கலை இளமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றனா்.



ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11) இன்று வரை நடைபெறும் இந்த விழாவில் 20 கலைக் குழுக்கள் பங்கேற்று, நையாண்டி மேளம், தோடா் நடனம், பரதம், துடும்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனா்.

மேலும் இதில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் வ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...