தை அமாவாசையை முன்னிட்டு திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் மாட்டுவண்டிகளுடன் விவசாயிகள் வழிபாடு

முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க மாட்டுவண்டிகளுடன் வந்து தை அமாவசையை அன்று கோயிலில் தரிசனம் செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் தை அமாவசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். மேலும் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டுவண்டிகளில் வருகை புரிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க மாட்டுவண்டிகளுடன் தை அமாவசையை அன்று தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் எனவும், காங்கேயம் இனம் நாட்டு மாடுகள் வளர்ச்சி பெருகும் என பல ஆண்டுகளாக முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் பல ஆண்டுகளாக வருகிறோம் என்றும் இதனால் கால் நடைகள் நோய் நொடியின்றி நலமாக தொடர்ந்து இருப்பதாகவும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தை அமாவாசை முன்னிட்டு உடுமலை திருமூர்த்தி மலை அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு உடுமலையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...