தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுரை

தூய்மை பணியாளர்கள், பொது மக்களிடம் குப்பைகளை வாங்கும் பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும் என்றும், அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தினந்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 49க்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று (பிப்.8) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் பணி குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் தூய்மை பணியாளர்கள், பொது மக்களிடம் குப்பைகளை வாங்கும் பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும் என்றும் அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தினந்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அப்போதுதான் நாளடைவில் அவர்களும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பார்கள். அப்போது உங்களுடைய பணி சுமையும் குறையும், குப்பைகளை கையாளுவதில் உள்ள சிரமமும் தவிர்க்கப்படும் என அறிவுரை வழங்கினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...