தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுரை

தூய்மை பணியாளர்கள், பொது மக்களிடம் குப்பைகளை வாங்கும் பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும் என்றும், அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தினந்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 49க்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று (பிப்.8) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் பணி குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் தூய்மை பணியாளர்கள், பொது மக்களிடம் குப்பைகளை வாங்கும் பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும் என்றும் அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தினந்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அப்போதுதான் நாளடைவில் அவர்களும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பார்கள். அப்போது உங்களுடைய பணி சுமையும் குறையும், குப்பைகளை கையாளுவதில் உள்ள சிரமமும் தவிர்க்கப்படும் என அறிவுரை வழங்கினார்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...